சனி, 29 அக்டோபர், 2016

நெருப்புச் சட்டியில் வளரும்...ரோஜா செடிகள்..?!?...

தமிழ் சினிமாக்களிலும், தொலைக் காட்சி தொடர்களிலும், பெண் குழந்தைகள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று வரும் வரை..தான்...வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பதாக தாயார்கள் புலம்பும் காட்சியை.. சாதாரணமாக கண்டிருப்போம்... !

ஆனால் கடுமையான குளிரை போக்க.. வயிற்றில் எப்போதும் “காங்கர்” எனும் நெருப்பு சட்டியை கட்டிக் கொண்டு, நடமாடி..பழக்கப் பட்ட,...காஷ்மீரின் தாய் மார்கள், இராணுவம், போலிஸ், குண்டு வெடிப்பு,கடையடைப்பு, ஊரடங்கு, தற்கொலை தாக்குதல், கண்மூடித்தனமான, தீவீரவாதம், மதவாதம் இவற்றிற்கு இடையில் தங்கள் குழந்தைகள் பள்ளி சென்று திரும்பும் வரை, அனுபவிக்கும் வேதனையை எந்த வார்த்தைகளால்..எடுத்துரைக்க முடியும்..??

     ஜம்மு&காஷ்மீரின், போர்ட் ஆப் ஸ்கூல் எஜிக்கேசன், சுமார் 500 க்கும் மேற்பட்ட, அதன் பள்ளிகளில், இந்த நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை, தனது வழக்கமான வருடாந்திர தேர்வுகளை  10ம் வகுப்பிற்கும், மற்றும் நவம்பர் 15 முதல் டிசம்பர் 3 வரை, பனிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தியாக வேண்டும்..!!

     ஆனால் நிலைமையோ வேறு விதமாக இருக்கிறது..!! ஹிஸ்புல் முஜாகிதீன் பிரிவை சார்ந்த..பிரிவினைவாதி புர்கான்வாணி கொல்லப் பட்ட பிறகு, கடந்த ஜூலை மாதம் 9 தேதிக்கு பிறகு... அனைத்து பள்ளிகளும், இந்த அழகிய பள்ளத்தாக்கில் மூடப் பட்டிருக்கின்றன..!!


     வேறு கவலைக்குரிய விஷயமும் இருக்கிறது...!! சுமார் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகள்,பல் வேறு பகுதிகளில்  தீ வைத்து கொளுத்த பட்டிருக்கிறது..!! பிரிவினை மற்றும் மதவாதிகள்.. கிராமத்து குழந்தைகள், பள்ளிக்கு சென்று படிப்பதை விரும்பாமல், அவர்களை தடுத்து.. மதக்கல்வியை புகட்டவும் ஜமாத் பள்ளி மற்றும் மதரசாக்களில் மட்டுமே.. அவர்களை படிக்க வைக்கப் படுவதில்....ஈடுபடுத்துவதில் குறியாக இருக்கிறார்கள்..!!?!

     மத்திய அரசின், உள்துறை அமைச்சகம் , இவ்வாறு மூடப்பட்ட அனைத்துக் கல்வி நிலையங்களையும் மீண்டும் திறக்க வைக்க ஜம்மு & காஷ்மீரின் காவல் துறையிடம் செயல் திட்டம் ஒன்றை கேட்டிருக்கிறது.. இவ்வளவு நாட்கள் கழித்து திறக்கப் பட்டாலும், விடுபட்ட கல்வி நிலையில் அதனை பெறுவதிலும்.. நார்மலான நிலைக்கு வரவும்...மாணவர்கள்...பாவம்.. மிகவும் சிரமப் படுவர் என்பதே உண்மை...!

       காவல் துறையோ, சட்ட ஒழுங்கை பராமரிப்பதிலும், தீவீரவாதம் சம்பந்தப் பட்ட நிகழ்வுகளை கண்காணிப்பதிலும் பெரும்பான்மையான காவல் துறை சக்தி பயன்படுத்த படுவதால்...ஓவ்வொரு பள்ளியிலும்..காவல் துறை அலுவலர்கள்.. நின்று கண்காணித்து ...பள்ளிகளை நடத்துவது சாத்தியமில்லை என்று கைகளை விரிக்கிறது...!!

      வேண்டுமானால் கல்வித் துறை, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கடை நிலை ஊழியரை எந்த நேரமும் பணியில்  இருக்க செய்து...விரும்பதாக சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்துக் கொள்ளட்டும்....என யோசனை தெரிவிக்கிறது...??!!!

       மேற்கண்ட அனைத்து அவலத்திற்கும் இடையில் ஒரு வெளிச்ச கீற்று காஷ்மீர் பள்ளத்தாக்கில்.. கல்வி சம்பந்தபட்ட, இந்த  அவலத்தை போக்கும் வகையில் வந்து...உன்னத நிலையில் பரவியும் கொண்டிருக்கிறது...!! அது தான்...இந்த கட்டுரையில் நோக்கமே..!

     ஆமாம்...! ஹர்த்தால் ஸ்கூல் (ஊரடங்கு பள்ளிகள்) எனும் பொருள் பட, படித்த கல்லூரி மாணவியர், இதர படித்த ஆசிரியர்கள் உதவியுடன், தங்களது வீடுகளில், கட்டணதொகை எதுவுமின்றி, தங்களுக்கு தெரிந்த பாடங்களை அண்டை அயலாரின் குழந்தைகளுக்கு சொல்லி தருகின்றனர்..!!

      பள்ளிக்கூடங்களை போலவே...தனியார் டியூசன் செண்டர்களும் மூடப்பட்ட நிலையில்... இந்த ஹர்த்தால் பள்ளிகள்.. மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது..!!

     நைரா நூர், வயது 24, கணக்கை முதன்மைபாடமாக, ஹஸ்ரத்பாலில் உள்ள செண்டர் யுனிவர்சிட்டியில் படித்தவர், அருகாமையில் வசிக்கும் ஒரு சில பெண் குழந்தைகளுக்கு கணக்கு பாடம் மற்றும் சொல்லி கொடுக்க ஆரம்பித்து..சமூக சேவை உணர்வில்...பின்னர் அனைத்து பாடங்களயும் எடுப்பவராக, பல்வேறு அக்கம் பக்க பகுதிகளில் இருந்து வந்து , பெற்றோர்கள்..தங்கள் குழந்தைகளுக்கும் பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க.. இந்த பள்ளியை...தன் வீட்டிலேயே நடத்தி வருகிறார்..!!

      நெடு நாட்களாய் மூடப் பட்ட பள்ளிகள், அடிப்படை வசதிகள் இல்லாத, மூடப் பட்ட, செல்ல  அனுமதி இல்லாத சாலைகள், தகவல் தொடர்புகள் இல்லாத, தடுப்புகள் வைக்கப் பட்டுள்ள தெருக்கள், ஊரடங்கு உத்தரவு என...ஏறத்தாழ சிறைச் சாலையில் இருப்பது போன்ற உணர்வில் உள்ள, குறிப்பாக பள்ளி செல்லாத குழந்தைகளின், சோர்வுற்ற.. பின் தங்கிய மன நிலையில்,

     இவற்றை பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்காமல், என்னால் இயன்ற வகையில், ஆசிரியராக உள்ள தனது தந்தையின் உதவியுடன், தனது படிப்பையும் தொடர்ந்து கொண்டு... இந்த குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வரும் உன்னத பணியை செய்கிறார்.. நைரா நூர்...! இதற்கென தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கியும் இருக்கிறார்...!!

      இவறை போலவே, மஸ்ரத் கான், வயது 27, தன்னுடன் படித்த பல்வேறு இளம் பெண்களின் உதவியுடன், அருகில் உள்ள பகுதிளில் இருந்து வரும் சுமார் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, சமூக கூடத்தில் வகுப்புகள் நடத்தி வருகிறார்...!! நாங்கள் முறையாக ஆசிரிய பணிக்கு ஏற்புடையவர்களா..? என்பது தெரியாது.. ஆனாலும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதிலும்....பள்ளிக்கு வருவது போலவே அவர்களும்..புத்தகப் பைகளை சுமந்து வருவதிலும்....ஆர்வமுடன் கற்பதும்....கோரசாக பாடல்கள் பாடுவதை கேட்ட மிகவும் ஆனந்தமாகவும் ஆத்ம திருப்தியாகவும் இருக்கிறது..!! என்று சொல்லும் இவர்களும் எவ்வித கட்டணமும் வாங்குவதில்லை....!! கட்டணம் கொடுக்கும் அளவிற்கு சூ்ழ் நிலையும் இல்லை....!!

     ஸ்ரீ நகரில் மட்டுமல்லாது, இது காஷ்மீர் & ஜம்முவின் பல பகுதிகளிலும், பல்வேறு ஆசிரியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் இவர்களை கொண்ட ஹர்த்தால் ஸ்கூல் எனும் தன்னார்வ.. இயக்கமாக பரவி வருகிறது...!!

      வெறும் பெண் குழந்தைகள் மட்டுமே பங்கு கொள்ளும் ஹர்த்தால் பள்ளிகளும் உண்டு..!! இதனால் பொது தேர்வுக்கு தயார் ஆகும் நிலையில், ஓரளவிற்கு அனைத்து பள்ளி பாடங்களை இந்த ஹர்த்தால் ஸ்கூலின் வழியாகவே முடித்து, தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், எண்ணற்ற மாணவ மாணவியர் உள்ளனர்..!

     வன்முறையும், தீவீரவாதமும் தலைவிரித்தாடும் இந்த காஷ்மீர பூமியில், புதிய வகையில்.. மாற்றுச் சிந்தனையுடன், துணிச்சலாவும்,பிரகாசமாகவும், இந்த மண்ணின் மாணவ மாணவியர்,  புதிய உத்வேகத்துடன்...கல்வியை பெற்று வருவது..புதிய யுகத்தின் புதிய விடியலாகவே பார்க்கப் படுவதாக, சமூக அறிஞர்களும்,கல்வியாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்..!!

     காஷ்மீர் யூனிவர்சிட்டியின், முன்னாள் பேராசிரியர், அப்துல் அஜீஸ், கூறுகையில், “ கற்றல் எந்த சூழ் நிலையிலும் தடைபடக்கூடாது...பாலஸ்த்தீனத்தில் பல ஆண்டுகளாக போர்களும் கலவரங்களும் இருந்து வந்த போதிலும்..அவர்கள் கற்பதை கைவிடாத சமூகமாக தொடர்ந்து, கற்று... முன்னேறியும் வருகிறார்கள்..!! எவ்வித அக்னி பரிட்சைகள் என்றாலும்.. துயரங்கள் என்றாலும் .அதிலிருந்து சமூகம், கற்று முன்னேறி வரவேண்டும்..” என்கிறார்...!!

       இனி தமிழ் நாட்டின் ஒரு செய்தியை பார்க்கலாம்...! திண்டுக்கல் மாவட்டத்தில், 60 நாட்களில், 20 மாணவியர் மாயமாகி விட்டனர் என்ற இன்றைய செய்தி, வேதனையை தருகிறது..!! காஷ்மீர் நிலையை ஒப்பிடும் போது நம் தமிழ் நாட்டின் கல்வி பெறும் வாய்ப்பு... நிலை..குறிப்பாக பெண்களுக்கு..?? என்ன குறை கண்டோம்..!

       ஆண்களுக்கு கல்வி கொடுத்தால்...குடும்பம் முன்னேறும்...!!பெண்கள் கல்வி பெற்றால் சமூகமே முன்னேறும்....!! கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் மட்டுமல்ல..  இதை தவிரவும், சுகாதாரம், சுற்று சூழல், உரிமைக் கல்வி,   நுகர்வோர் உரிமைக் கல்வி, தகுதியான பெற்றோராக இருப்பது, குழந்தை வளர்ப்பு,  இதற்கெல்லாம் மேலாக..சமூகத்திற்கும். உதவுவது...!!

      காஷ்மீரிலிருந்து நாம் தொலைவில் வேண்டுமானால், தூரமாக இருக்கலாம்...ஆனால் அதன் தற்போதைய மோசமான கடுமையான நிலையிலும்....கல்வி தாகத்தில்...குறிப்பாக பெண் கல்வி... துப்பாக்கிகளுக்கும், வன்முறைக்கும், மதவாததிற்கும், குண்டு வெடிப்புகளுக்கும் இடையில் அவர்கள் கற்பதை... கற்கவேண்டும்...!

நாக.பன்னீர் செல்வம்

     

 

     


   

   











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக