புதன், 20 நவம்பர், 2019

நீதி மற்றும் அநீதி நோய்கள்......!

       
Image result for indian village diabetes heart patients

    சமீபத்தில் அதிகம் கேள்விப்படும் ஹார்ட் அட்டாக்குகள் மற்றும் நீரிழிவு நோய்கள்  கொஞ்சம் நின்று சிந்திக்க வைக்கின்றன..பள்ளி பருவத்து நண்பர்களுக்கும்..கல்லூரி தோழர்களுக்கும்.. அவை ஒரு சிலருக்கு வருவது வாழ்வியலை கவனித்து தற்காலிகமாக  அச்சப்பட்டு பயணிக்க வைக்கிறது..
ஹார் அட்டாக்கை பற்றி இவ்வாறான எண்ணங்கள் இருந்தாலும்.. நீரிழிவு என்னும் டயாபட்டிசை நான் குற்றம் சொல்லுவதில்லை...அது அருமையான.. நீதிபரிபாலனம் செய்யும்.. நீதி நோயாகவே...எனக்கு  நம்ப தோன்றுகிறது..!?!

          ஆமாம்..ஆரம்ப காலத்தில்..அரசியல்.. சாதி என... அடி.. தடி அட்டூழியம்.. அராஜகம் செய்தவர்கள் சக்கரை நோயால்..குறுகி.. கையில், இஞ்செக்சனுடன் வாக்கிங் சென்று கொண்டு..சாப்பாடு குறித்து என்னேரமும் சிந்தித்து கொண்டு அளந்து அளந்து... தேர்ந்தெடுத்து..சாப்பாட்டை கண்டு அச்சம் கொண்டு.. மருந்து மாத்திரையுடன்  அதைவிட.. சதா சர்வ காலம்  நோய் குறித்த கவலையுடன்.. அந்த நோயுடன் மனைவிக்கு நிகராக, அன்னியோன்யமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை கண்டால்..ஆகா கடவுள் இருக்காண்டா குமாரு......என்று துள்ளத்தோன்றும்..!! 

          அப்புறம், கடவுளும், நீதியும், ஏழைகள் வசாக்கும் செய்யாததை சர்க்கரை நோய்.. இன்சுலின் வகையாறாக்கள் சூப்பரா செய்வதை கண்டால் ஆனந்தம் வரத்தானே செய்யும்...! அதைவிட இத்தகைய அநீதி மான்களை குறித்து.. கூட இருப்பவர்கள் அல்லக்கைகள், எதிரிகள், பார்வையாளர்கள் யாராக இருந்தாலும்.. பேச்சு வழக்கில்..”பாவம் அண்ணணுக்கு சர்க்கரை” என சம்பந்த பட்டவரை நோய் மன்ப்பான்மையுடன் வைத்திருப்பது..அவருக்கு, ”என் பங்கு இந்தா புடிச்சுக்கோ”.... என,  மருந்து..கைவைத்தியம்..சிறப்பு மருத்துவர்கள்..இவரை ஒத்த மற்றவர்களுக்கும் சர்க்கரை வியாதி வந்ததை குறித்து  எடுத்துரைத்து.. கலங்கடித்து.. நோயாளியை லாக் செய்து எப்போதும் அவரை பரிதாப உணர்ச்சிக்குள் வைத்திருப்பார்கள்....!?
         வேண்டாத, வெல்லமுடியாத, எதிரியை பரிதாபம் கொண்டு பார்ப்பதை விட வேறு என்ன பாக்கியம் இந்த உலகத்தில் இருந்து விடமுடியும்..?!?

           இதை விட..  டீக்கடையில் டீ போடும் மாஸ்டர்கள் எல்லோரும்..சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவம் படித்தவர்களாகவே எனக்கு தோன்றும்..! பின்னே, நாலைந்து நண்பர்களாக..கும்பலாக.. டீ குடிக்க சென்றால்..அதில் ஒரு சிலரை மட்டும் குறி வைத்து, வம்படியாக, சார் உங்க இரண்டு பேருக்கும்,,, சர்க்கரை போடுனுமா.. வேண்டாமா..இல்ல கம்மியா..?? என  டாக்டர்கள் ரேஞ்சுக்கு கேட்பதும்...அப்புறம் அதில் ஓரிருவர், டீ மாஸ்டர் கேட்டது போலவே.. ஆமாம்ப்பா.. எனக்கு சர்க்கரை போடாதே.. அல்லது கம்மி.. என சொல்லி விட்டால் போதும்...ஆகா டீ மாஸ்டருக்கு ஒரு ஆனந்தம்.. திருப்தி வரும்..பாருங்கள்..!? அதை வார்த்தையால்  வர்ணிக்க முடியாது..?! 

           அதன் மறைமுக அர்த்தம்.. “டேய்..எனக்கு தெரியாதா.. உன்னை பத்தி.!.உன்னை பார்த்தாலே தெரியும்டா.! .உனக்கு சர்க்கரை இருக்குண்ணு...யாருகிட்ட..??!!” என்பது போல..என்னிடம் அப்படி யாராவது கேட்டால்.. நல்ல வேளை கேட்டீங்க..!? எனக்கு நல்ல தூக்கலாக... ஜீனி போட்டு கொடுங்கள்..  நாட்டு சக்கரை சமாச்சாரமெல்லாம் வேண்டாம்.. என அது ஒத்துக்காது..?!! என சொல்லி விடுவேன்..?? அவர் நம்மை விசேஷ  ஜந்துவை போல் பார்ப்பார்..! அதுவா முக்கியம் நமக்கு சக்கரை நோய் இல்லை என்பதை பூரூப் பண்ணணும்..பாஸு..?!!

           ஆனாலும், ஹார்ட் அட்டாக்கை பற்றி அப்படி நினைக்க முடியவில்லை.. நெருங்கிய.. நண்பருக்கு அது வந்து அதன் தொடர்பான பாதிப்புகள் கண் முன்னால் காண நேரிட்ட போதும்...வெகு சமீபத்தில் கல்லூர் நண்பர்,  ஹெல்த் இன்ஸ்பெக்டராக அரசு பணியில் இருந்து கொண்டு தனியாக மருத்துவமனை கிளினிக் வைத்து கொண்டு, மற்றும் வீட்டிலும் சுற்று வட்டாரத்தில் ஒரு டாக்டராகவே பாவித்து..வைத்தியம் பார்த்து கொண்டு நல்ல சம்ப்பாத்தியத்தில்..தனது ஒரு மகனை டாக்டருக்கு வெளி நாட்டில் படிக்க வைத்து.. மற்றொரு மகனையும் தன்னை போலவே மருத்துவபணிக்கு?!!. தயார் செய்து கொண்டிருந்தவர்,

           திடிரென, வெகு சமீபத்தில், முதுகு வலி என, மகனுடன் காரில் சென்று, பிரபல மருத்துவமனைக்கு தானே, சென்று, மருத்துவருடன் உரையாடி, இயல்பாக, எந்த வித அபாயமும் இல்லாமல், இ சி ஜி எடுத்த போது, திடிரன இறந்து விட்டார்..! ஊருக்கே வைத்தியம் பார்த்தவர், தன்க்கு ஹார்ட் அட்டாக் வந்ததை வருவதை அறியாமல் இருந்தது தான்..வெகு ஆச்சர்யம்..!

            இதை விட, என்னுடன் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு படித்தவன், உடல் வாகில் அவனை, இன்று வரை அனைவரும் தேக்கு என்றே புனைப்பெயருடன் அழைப்பார்கள்.. அவன் திடிரென மாரடைப்பால் இறந்தது, ஹார்ட் அட்டாக்கின் பரிமாணத்தை மேலும் சிந்திக்க வைக்கிறது.. ஒரு நடுத்தர குடும்பம் ஹார்ட் அட்டாக்கினால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவு செய்வதோ, அல்லது ஏற்படும் உயிரிழப்போ, அந்த குடும்பத்தை, அதன் முன்னேற்றம் வளர்ச்சியில் இருந்து சட்டென பல ஆண்டுகளுக்கு பின் தள்ளி வைத்துவிடுகிறது..?! தீ விபத்தில் ஒரு குடும்பம் அனைத்தையும் தீயிக்கு இரையாக்கி, மீண்டும் புதிதாக வாழ்வை ஆரம்பிப்பது போல துயரமானது அது....!?!

       மேற்குறிப்பிட்ட, தேக்கு என்பவன் என்னுடன் இரண்டாம், மூன்றாம்  வகுப்பு படித்த காலத்தில், அவன் உடல் வாகினால் பொறாமை கொண்டு, அவனுடன் மதிய இடைவேளையில் கூட்டமாக சண்டையிடுவோம்...அதாவது அவனை போட்டு அனைவரும் அடிப்பார்கள்..?! நான் மட்டும் அவனுக்கு பிரண்ட்..?!, ஒரு வெயில் கால  மதிய உணவு இடைவேளையில்.. நானும் கூட்டத்தோடு கூட்டமாக..அவர் பார்க்கவில்லை என்ற தைரியத்தில் அவனை முதுகில்  அடித்து விட்டேன்..?!! நம்ம சுழியும் சும்மாவா என்ன..?!! எல்லாவற்றை விட, இன்று வரை ஆச்சர்யம், பள்ளி விடும் போது, என்னிடம், “ என்னை நீ ஏண்டா அடிச்ச..?! என கேட்டது தான்..?! நான் அவனை அந்த கூட்டத்தில்..அடித்தது எப்படி அவனுக்கு தெரிந்தது..?!! இன்று வரை எனக்கு தெரியாத..புரியாத புதிர்..?!!?

           பரஸ்பரம், 53 வயதாகும் நிலையில் எப்போதாவது பார்க்கையில் புன்னைகை செய்து, நலம் விசாரித்துக்கொள்வோம்..!! கூச்சத்துடன் என்னை பார்த்து சிரிப்பான்..! ஆனாலும் அவன் கேட்ட கேள்வி மட்டும்.. பதிலின்றி தொடரும்.!?!.இன்று அவன் இல்லை..கேள்வி மட்டும் அப்படியே இருக்கிறது..?!!

               பிரபல இருதய மருத்துவர், திரு.சொக்கலிங்கம் ஒரு முறை சொன்னது,  இப்போதும் நினைவில்  இருக்கிறது.. “ இறந்த காலம் என்பது உடைந்த போன பாணை...!? எதிர்காலம் என்பது மதில் மேல் பூனை....!?  நிகழ் காலம் மட்டுமே கையில் உள்ள வீணை.?!.” இது இதயம் சம்பந்தபட்ட நோய்களுக்கு முற்றிலும் பொருந்தும்  என்றே தோன்றுகிறது...!?

            .ஆமாம்..ரொம்ப நாளா, ரொம்ப வருசமா... ஒரு சந்தேகம்...இருதய பரிசோதனைக்கு டாக்டரை பார்த்து பரிசோதித்து கொள்ளலாமா..?!? அல்லது தனியாக ”லேபி”ல் செய்து கொள்ளலாமா..??!?..லேப் என்றால் ரிப்போர்டை  டாக்டரிடம் காட்டினால் ஒத்து கொள்வாரா..?!! அல்லது அவரே பரிசோதிக்க வேண்டும் என்பாரா..?!! இத்யாதி..இத்யாதி சந்தேகங்கள்......!?

      இப்ப கொஞ்சம் வேலை இருக்கிறது...!? அப்புறமா விசாரித்து சொல்லுங்கள்..?!  நீங்கள் சொல்லா விட்டாலும் பரவாயில்லை.!!??!!

  நாக.பன்னீர் செல்வம்.....

           

























வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நெய் பந்தம்..

     
        முஸ்லீம், கிருஸ்துவ  உள்ளிட்ட ஏனைய மதங்களில் திருமணம் ஆனாலும்..இறப்பு, சாவு நிகழ்ச்சிகள் ஆனாலும்,  இவை தொடர்பான சம்பிரதாய...சடங்குகளுக்கு..   வரையறுக்கப் பட்ட முறைகளில் அதனை வழி நடத்த இதற்கென உள்ள குருமார்கள் இருக்கிறார்கள்... !

       ஆனால் இந்து சமயத்தில்.. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களின் திருமண நிகழ்வுக்கு வரும்.. பிராமண புரோகிதர்கள்..அவர்களின் இறப்பு நிகழ்ச்சிக்கு வருகிறார்களா..என்றால் இல்லை...!?!இது ஏன்..?!

      இவ்வாறு வரைமுறைக்கு உட்படாத  வகையில் இறுதி சடங்குகள்..மேற்கண்ட வகுப்பினருக்கு..பல பட்டறையாக.. நடந்து முடிவது தான் நான் இங்கு சொல்ல வருவது..! 

       பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட..ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பல பழக்க வழக்கங்கள்..சற்றே.. ஏறக்குறைய .. பலவகைகளில் ஒன்றுபட்டவையே..! நாம் தான் உயர் சாதி..தாழ்ந்த சாதி என்று அடிப்படை புரியாமல்..பீற்றிக்கொள்கிறோம்..! அவ்வகையில் சாவு வீட்டு நிகழ்ச்சிகள் விதிவிலக்கில்லாமல், ஒன்று போலவே சிறப்பானவை..?!?

      சமீபத்தில் உறவினரின் வீட்டு சாவு..துக்கம்  ஒன்றிற்கு..ஒரு சிறிய  கிராமத்திற்கு சென்றிருந்தேன்.. சுற்று புற நிகழ்வுகளை கவனிக்க தொடங்கிய நாள் முதல்.. நான் முன்பு குறிப்பிட்ட சமூக பிரிவினரின்.. அனைத்து சாவு வீட்டு நிகழ்வுகளும்..ஏறத்தாழ ஒன்று போலவே இருப்பதும்...இன்றளவும் மாறாமல் இருப்பது தான்.. இங்கு  நாம் பகிர்ந்து கொள்ளும் சேதி..!

         சுமார் 20-25 வருடங்களுக்கு முன் இழவு செய்தி உறவினர்களுக்கு சென்று சேர்வது என்பது பிரயத்தனமான காரியமாகும்.. இதனை செய்ய கூடியவர்கள்..ஒரு காலத்தில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் என்றிருந்தாலும்..மற்றவர்களும் செய்வதுண்டு..! வாடகை சைக்கிள்.. இரவல் சைக்கிள்..கிடைக்கும் இரு சக்கர வாகனம் என்று.. ஒவ்வொரு திசைக்கும் ஒரு ஆள் அல்லது இருவர்.. பெரிய ரவுண்டு சென்று.. பிணத்தை எடுப்பதற்குள் உறவினர்கள் அனைவரும் வந்து சேருமாறு செய்ய வேண்டும்..!

       சாவு விழுந்தவுடன்..துக்கம் சொல்ல கூப்பிடுவார்கள் என்று..தாங்கள் ஆசையாக வாங்கி வைத்த வாகனங்களை ஒளித்து வைப்பதும்..தான் மாட்டிக் கொள்ளக்கூடாது எஸ்கேப் ஆகிவிடும் விவரஸ்தர்களும் உண்டு..! இப்போது உள்ளது போல்..போனில் எல்லா தகவல்களும் போய் சேரும் வசதி.. ”இதோ இப்ப உயிர் விட்டுடும்”.... கிளம்பி இருங்க....சொன்னவுடன் புறப்பட்டுவிடலாம்..?!? என்பது போலான குரூரமான கைப்பேசி..அப்டேட்கள் அந்நாளில் இருந்ததில்லையே..!

       செத்த சேதி சொல்ல போனவர்கள்..ஒரு சிலர்..கையில் காசிருக்கும் தைரியத்தில்..வழியில் கிடைக்கும்.. தென்னங்கள்,..பனங்கள் என குடித்து விட்டு..தோப்பு, துறவு என சுகமாக தூங்கி விட்டு.. சொல்ல போன செய்தியை சொல்லாமல்........எல்லாம்  முடிந்து, இரவு வந்து சேருவதும் உண்டு..! புகாருக்கும்,.. வெட்கத்துக்கும் பயந்து..இவர்கள் கொஞ்சம் நாளைக்கு வெளியே தலையை காட்டமாட்டார்கள்..?!?

       பின்னாளில்.. விழப்போகும் பிணத்துக்கும் கூட இந்த அபாக்கியவான்களான, மதுப்பிரியர்களின்  தலை உருட்டப் படும்.. ! "எப்பா..?!..மாரியப்பன் மகன மட்டும் துக்க சேதி சொல்ல அனுப்பாதீங்க.! குடிச்சுட்டு.. படுத்து கிடந்துட்டு மறு நாள் தான் வருவாப்புல”.... ”அப்படித்தான்...இன்னார் வீட்டுக்கு” ஆரம்பித்து..என மானம் கப்பல் ஏறும் அபாயமும் உண்டு..!

        சாவுக்கும்....கருமாதிக்கும்...இடையில் பல முக்கிய உறவுகள், செய்தி சொல்ல போனவர்களால்..தகவல் விடுபட்டு..  கெட்டு பாழாகி இருக்கும்..! பின்னே..செத்தது கூட தெரியாமல் இருப்பவர்களிடம்..கருமாதி பத்திரிக்கை எடுத்து சென்றால்..என்னவாகும்..?!? தாண்டி தோண்டியில் விழுந்து...அழுது ஒப்பாரி வைத்து..செத்த துக்கத்தைவிட..அந்த செய்தி சொல்லாமல் ஒதுக்கி வைத்த துயரமே...மேலோங்கி..உறவுக்குள். சண்டை சச்சரவு என நீண்டு..அது சரியாக நிறைய காலமும் பிடிக்கும்..!

        இறப்பு தினத்தில்  நடைபெறும் சடங்குகள் இன்றளவும் ஒருங்கிணைக்கப் படாமல்..ஒத்த முறையில் இல்லாமல்  ஆளாளுக்கு பேசுவதான் நகைப்புக்குரிய அவலமாக இருக்கும்..அதிலும் ஒரு சில கிராமங்களில் இன்றளவும் தொடரும்  முடி திருத்தும் தொழிலாளிகள், சலவைத்தொழிலாளர்கள் மற்றும் ஆதிதிராவிட தொழிலாளர்களின் பாடு சொல்லில் அடங்காது..!

       ஏதோ லட்சகணக்கில் தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பது போல அதட்டலும் மிரட்டலும் தூள் பறக்கும்..! சமீபத்தில் ஒரு துக்க வீட்டிற்கு சென்றிருந்த போது, இறந்தவரின் உடலை குளிப்பாட்ட ஒரு பெஞ்ச் எடுத்துவரப்பட்டு அது அகலம் குறைவாக இருந்த காரணத்தால், இன்னொரு பெஞ்சும்  கொண்டுவரப்பட்டு.. இரண்டையும்  இணைத்து அதில் குளிப்பாட்ட ஏற்பாடுகள் நடந்து நல்லாத்தான் போயிகிட்டு இருந்தது....!..அப்போது தான் எழுந்தது அந்த களேபாரம்...!?!

     யாரோ ஒரு புண்ணியவான்...எல்லாம் தெரிந்தது மாதிரி..ரெண்டு பெஞ்சில் குளிப்பாட்டலாமா..?? கூடவே கூடாது ..என ஒரு குண்டை போட்டு விட..!!அவ்வளவு தான் ஆளாளுக்கு குளிப்பாட்டலாம்..? குளிபாட்டக்கூடாது..? என விவாதங்கள் எழுந்து, அப்புறம் பைனலாக..ஒரே பெஞ்சில் குளிப்பாட்டி...பாடி.. ஒரு தரம் கைத்தவறி..கீழே விழுந்து...எப்படியோ ஒரு வழியாகவோ..வேறு வேறு வழியாகவோ.. செத்தவர் சிவ லோக சென்று சேர்ந்தார்...!!

       எனக்கு அப்புறம் ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்...பிராமண புரோகிதர்கள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயங்களுக்கு திருமணம், வீடு குடி போதல் உள்ளிட்ட ஏனைய சுப நிகழ்வுகளுக்கும்...இதர கருமாதி, திவசம் போன்ற தீட்டு கழிக்கு சடங்கு முறைகளுக்கு வருபவர்கள்.. இறப்பு நிகழ்வையும் முன்னின்று நடத்துவதில்லை..?! அரம்ப காலம் முதலே அவர்களை  அழைக்க வில்லையா..? அல்லது இந்த கூட்டத்தில் நாம் போய் மாட்டிக்கொள்ளக்கூடாது என்ற  அவர்களின் முன்னெச்சரிக்கையா..? இல்லை, குறிப்பிட்ட சமுகங்களின் ..உரிமை சார்ந்ததாக ..அடுத்தவரிடம் கொடுக்க முடியாததாக. பிரிலேன்ஸ்..எனும் முறையில் சுதந்திரமாக இஷ்டப்படி சாவை, சடங்குகளை நடத்தல், அனுசரித்தல் அல்லது கொண்டாட ஏற்பாடா..?? நாம் அறியோம் பராபரமே தான்..?! 

      ஆனாலும், நான் கண்டவரையில், கிராமங்களில், சாவுக்கான இறுதி சடங்கை.. நிகழ்வுகளை... இதனை நடத்துவபர்கள் சலவை, முடிதிருத்தும், தொழிலாள ஏனைய உள்ளூர் பூசாரிகள், லோக்கல் குருமார்கள்..!, வயதான பெரியவர்கள், என ஆளாளுக்கு, பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பாவம்.. சங்கடமாக பதிலை  சொல்லி சமாளிப்பவர்களாக, அல்லது.. ”வா .. நீ வந்து செய்”.. என கோபப்படுவர்களாகவே, இருக்கிறார்கள்..! 

        உதாரணத்திற்கு ”முதல்ல  நீ இதை செய்திருக்க கூடாது..? அல்லது..இது மாதிரி செய்து பழக்கமில்லையே..?!? என திடிர் திடிரென எனும் கேள்வி கணைகள் அதை தொடர்ந்து சமாளிபிகேசன்ஸ் என பார்க்க பார்க்க வேடிக்கையாக இருக்கும்..?! 

       வெளியூரில் வேலை பார்க்கும் ஒரு மகனின், வயதான  தந்தை.. ஒரு மாலையில் இறந்து விட...மகனும் இரவு வந்து  சேர்ந்து,  நாங்களும் முன்னின்று இறுதி ஏற்பாடுகளை,  நடத்த... மிக மிக ஒல்லியான தேகத்தை உடைய  அந்த வயதான, இறந்த,பெரியவருக்கு   பீரிசர் பாக்ஸ் எதுவும்  தேவை யில்லை எனமுடிவில், ஏழ்மையை கருதி சிக்கனமாக செலவு செய்து அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது...!

      தூக்க.... ஒரு மணி நேரத்திற்கு முன், இறந்தவரின் மகனின், நீண்ட நாளைய நெருக்கமான நண்பர் மது பாட்டிலுடன்  வந்து, துக்கம் விசாரித்து, கொல்லை கடைசிக்கு சென்று இருவரும்  நட்பு, துக்கம்  மற்றும் மது ஆகிய மூன்றையும் அருந்தி விட்டு, பின்னர் , திடிரென ஞானதோயம் வந்து, ” என் அப்பாவிற்கு ஏன் பீரிசர் வைக்கவில்லை..?? நாங்கள் என்ன அவ்வளவு கேவலாமாகவா போய் விட்டோம்..??  என பொறுப்புடன், சண்டையிட துவங்க...!?!...அது வரை சும்மா இருந்த மகன், நாம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம்..நம்மை கேட்டு..?!? ...அப்புறம் ஏற்பாடு செய்பவர்கள், ஏற்பாடு செய்யாத ஏதோ ஒன்றுக்கு, இயல்பாக விடுபட்டு ஒன்றுக்கு... குற்றவாளிகள் போலவும்.. அப்படி இப்படி என ஒரு வழியாக கதை முடியும்..!

     இதில் இன்னொறு சிறப்பும் உண்டு...செத்தவுடன் என்னேரமானலும் இரவு 12 மணி என்றும் பாராமல்.... ஊர் அல்லது தெரு நிர்வாகம்..நாட்டாண்மைகளிடம் சோகமாக...பவ்யமாக  சொல்லி..இறப்பு  காரியத்தை நடத்தி விட்டு.. கருமாதிக்கு கறி.. பிரியாணி,மது  விருந்து ,தீட்டு கழிக்க... மாமன், மச்சான், நண்பர்களுடன் சேர்ந்து அட்டகாசமாக கொண்டாடி...போதையில்..”எவண்டா நாட்டாமை..அவனெல்லாம் ஒரு ஆளா..??! என கேவலபடுத்தி போதையில்...பெருமை சேர்ப்பவர்களும் உண்டு..!?! சாவு...பிணத்தை நல்லபடியாக மயானம் சேர்க்க.. அதை நடுத்துவதில்..ஊர் உதவி தேவை..!!.ஆனால்...கறிசோறுக்கும் போதைக்கும்...அவனெல்லாம் அதுக்கு லாயக்கு பட மாட்டாண்டா..!?! என வடிவேலு கதைதான்..!

       இந்த இறுதி சடங்குகள், மயானம் வரை உள்ள ஊர்வலம், அப்புறம் மயானத்தில் நடக்கும் சச்சரவு சல சலப்புகள், அனைத்தையும் பார்க்கும் ஒரு சிலர்,  இந்த அவலத்தை எல்லாம் பொறுப்புடன்  சிலாகித்து.. சமூக நடப்பை தொடர்ந்து  குறை சொல்வார்கள் .. ஆனால் ஒரு நாளில் அது  தனக்கும்  அதேவிதமாக நடப்பதை பார்க்க முடியாதவர்களாக இருப்பது தான்.. இதில் தரமான சம்பவம்...!, எனெனில் அப்போது அவர்கள் பிணமாக இருப்பார்கள்...! ஆனால் நிகழ்வுகள் செவ்வனே  தொடர்ந்து கொண்டுதான்.. இருக்கும்.. பார்வையாளர்கள் மட்டுமே மாறி இருப்பார்கள்..!?!

      இறந்தவருக்கு பேரக்குழந்தைகள் இருப்பின், அவர்கள் அனைவரும் இறுதி சடங்கில் சிறிய மூங்கில் குச்சியில் துணியை சுற்றி,அதில் நெய் விட்டு கொளுத்தி நெய்பந்தமாக பிடித்து நிற்பது வழக்கம்..அதிலும் கூட எண்ணிக்கை விடு பட்டு, பந்தம் பத்தாமல் போய்,  மகள் வயிற்று பேரக்குழந்தைகள், மகன் வயிற்று பேரக்குழந்தைகள் என பாகுபாடு, வேண்டும் என்றே, காட்டப்பட்டதாக,தகராறு மூண்டு சண்டையில் முடிந்த சாவு வீடுகளும் உண்டு..!

      இவை எல்லாம்......தமிழ் அறிஞர்கள்..தமிழ் புத்தகத்தில் குறிப்பிடும் பாணியில்... சொல்வதாக இருந்தால்...   “ எண்ணி எண்ணி இன்புறத்தக்கதே..?!?                  நாக.பன்னீர் செல்வம்  Naga.Panneer selvam